search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கோரிக்கை
    X

    வடகொரியாவுக்கு எண்ணெய் கொண்டு செல்வதை நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா கோரிக்கை

    வடகொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்தவும், அந்நாடு ஜவுளி ஏற்றுமதி செய்வதற்கு தடை கோரியும் ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
    வாஷிங்டன்:

    வடகொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்தவும், அந்நாடு ஜவுளி ஏற்றுமதி செய்வதற்கு தடை கோரியும் ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா வரைவு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.



    சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த வாரம் சக்திவாய்ந்த அணு குண்டுகளை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதித்ததாக செய்திகள் வெளியானது. இந்த ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையில் முழுமையான வெற்றி பெற்றதாகவும் வடகொரியா தெரிவித்திருந்தது.

    இந்த சோதனைகள் அமெரிக்காவை மீண்டும் ஆத்திரப்படுத்தியுள்ளது. இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா ஒரு வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது.

    அதில், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்வதற்கு தடை, வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை, அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்-க்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவது மற்றும் அவர் பயணம் செய்வதற்கு தடை ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    ஐ.நா பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் மற்ற நாடுகளான சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை ஆதரித்து வாக்களிக்கும் பட்சத்தில் இந்த தீர்மானம் நிறைவேறும். ஏதேனும் ஒரு நாடு எதிர்ப்பு தெரிவித்தாலும் தீர்மானம் செயலற்றதாகிவிடும்.

    வடகொரியாவின் எண்ணெய் தேவையை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பூர்த்தி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×