என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா மிரட்டல்: போப் ஆண்டவர் உதவியை கேட்கும் வெனிசுலா அதிபர்
Byமாலை மலர்24 Aug 2017 7:14 AM GMT (Updated: 24 Aug 2017 7:14 AM GMT)
அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி நிக்கோலஸ் மதுரா ஆட்சியை அகற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து வெனிசுலா அதிபர் போப் ஆண்டவர் உதவியை நாடி உள்ளார்.
கராகஸ்:
தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நாட்டில் நீண்டகாலமாக அதிபராக இருந்த ஜாவஸ், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான நிக்கோலஸ் மதுரா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நிக்கோலஸ் மதுரா ஆட்சியில் பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளது. அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் வெனிசுலாவில் உள்நாட்டு கலகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி நிக்கோலஸ் மதுரா ஆட்சியை அகற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிக்கோலஸ் மதுரா போப் ஆண்டவர் உதவியை நாடி உள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் அச்சுறுத்தலாலும் சர்வதேச அளவில் சில அழுத்தங்களாலும் வெனிசுலாவில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ராணுவத்தை இங்கே ஊடுருவ செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து எங்களுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். இதற்கு போப் ஆண்டவர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நாட்டில் நீண்டகாலமாக அதிபராக இருந்த ஜாவஸ், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான நிக்கோலஸ் மதுரா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் நிக்கோலஸ் மதுரா ஆட்சியில் பொருளாதார நிலை சீர்குலைந்துள்ளது. அவருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் வெனிசுலாவில் உள்நாட்டு கலகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி நிக்கோலஸ் மதுரா ஆட்சியை அகற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிக்கோலஸ் மதுரா போப் ஆண்டவர் உதவியை நாடி உள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் அச்சுறுத்தலாலும் சர்வதேச அளவில் சில அழுத்தங்களாலும் வெனிசுலாவில் அமைதியற்ற நிலை நிலவுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ராணுவத்தை இங்கே ஊடுருவ செய்வார் என்று எதிர்பார்க்கிறோம்.
அமெரிக்காவிடம் இருந்து எங்களுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். இதற்கு போப் ஆண்டவர் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X