என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெதர்லாந்து: எரிவாயு சிலிண்டர்களுடன் பிடிபட்ட மர்மவேன் - பாதுகாப்பு கருதி இசைக்கச்சேரி ரத்து
Byமாலை மலர்24 Aug 2017 12:18 AM GMT (Updated: 24 Aug 2017 12:18 AM GMT)
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆம்ஸ்டர்ம்:
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் மேற்கு ஹோலாந்து மாகாணத்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான அல்லா-லாஸ் கச்சேரி நடைபெற இருந்தது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றிருந்த நிலையில், அந்நகரில் எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய வேன் ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் பதிவு எண்களை கொண்ட அந்த வேனின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது. கடந்த வாரம் பார்சிலோனா தாக்குதலையடுத்து கேட்டோலேனியா நகரில் இதேபோல எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய லாரி போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
ஆனால், கேட்டோலேனியா நகர் சம்பவத்திற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை என அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் மேற்கு ஹோலாந்து மாகாணத்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் அமெரிக்காவின் பிரபல இசைக்குழுவான அல்லா-லாஸ் கச்சேரி நடைபெற இருந்தது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றிருந்த நிலையில், அந்நகரில் எரிவாயு சிலிண்டர்கள் நிரம்பிய வேன் ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
ஸ்பெயின் நாட்டின் பதிவு எண்களை கொண்ட அந்த வேனின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக இசைக்கச்சேரி ரத்து செய்யப்பட்டது. கடந்த வாரம் பார்சிலோனா தாக்குதலையடுத்து கேட்டோலேனியா நகரில் இதேபோல எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய லாரி போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
ஆனால், கேட்டோலேனியா நகர் சம்பவத்திற்கும் தற்போதைய நிகழ்வுக்கும் தொடர்பு இல்லை என அந்நகர போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அந்நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X