search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்சிலோனா தாக்குதல் தொடர்பாக மொராக்கோ நாட்டில் இருவர் கைது
    X

    பார்சிலோனா தாக்குதல் தொடர்பாக மொராக்கோ நாட்டில் இருவர் கைது

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிவாங்கிய வேன் தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ரபாத்:

    ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் 13 பேரை பலிவாங்கிய வேன் தாக்குதலில் தொடர்புடையதாக மொராக்கோ நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் உள்ள லாஸ் ராம்ப்லாஸ் என்ற சுற்றுலா பகுதியில் இருக்கும் ப்லகா கடலுன்யா பிளாசா அருகே பாதசாரிகள் சாலையை கடந்து கொண்டிருந்த போது, திடீரென அங்கு வந்த வேன் ஒன்று பாதசாரிகள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த கோர தாக்குதலில் 13 பொதுமக்கள் பலியாகினர். மேலும், 30-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், இதில் தொடர்புடைய தீவிரவாதிகளை போலீசார் தேடி வந்தனர்.

    இதனையடுத்து, காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியை முற்றுகையிட்ட போலீசார், அவர்களை நோக்கி சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்தினர். சில மணிநேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வேனை வாடகைக்கு வாங்கிய ட்ரிஸ் ஒபகிர் உள்ளிட்ட 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    தாக்குதலை ஏற்படுத்திய வேனை ஓட்டிவந்த யூனுஸை மேற்கு பார்சிலோனாவில் நேற்று நடந்த என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    இந்நிலையில், மொராக்கோ நாட்டில் இருவர் பார்சிலோனா தாக்குதலை கொண்டாடி பதிவிட்டதாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐ.எஸ் இயக்கத்தின் அனுதாபிகளாக அவர்கள் இருப்பதால், பார்சிலோனா தாக்குதலில் மறைமுக தொடர்பு இருக்கலாம் என்பதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×