என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் படைகளை அதிகரிக்கும் அமெரிக்காவின் முடிவு பலன் தராது - ரஷிய ஊடகம் தகவல்
Byமாலை மலர்22 Aug 2017 10:58 AM GMT (Updated: 22 Aug 2017 10:58 AM GMT)
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிடுவதற்காக படைகளை அதிகரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டம் பலன் தராது என ரஷிய ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
மாஸ்கோ:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அந்நாட்டு அரசுக்கிடையே கடந்த 15 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்பி வைத்தது. தற்போது அங்கு சுமார் 8400 அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், ஆப்கான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஆப்கானுக்கு மேலும் 4 ஆயிரம் அமெரிக்க துருப்புகளை அனுப்பி வைக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டார். அவரது இந்த உத்தரவிற்கு ஆப்கானிஸ்தான் பிரதமர், நேட்டோ படை தளபதி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிரான நிலைபாட்டில் ரஷியா இருப்பதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த முடிவு எந்த ஒரு நல்ல விளைவையும் ஏற்படுத்தும் என்பதை ரஷியாவால் நம்ப முடியவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்த ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X