என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழர் நியமனம்
கொழும்பு:
இலங்கை கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன ராணுவ தலைமை தளபதியாக நியமிக்கப்பட உள்ளார்.
எனவே அவருக்கு பதிலாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழர் ஆவார். இலங்கை கடற்படையின் 21-வது தளபதி ஆக பொறுப்பு ஏற்க உள்ளார்.
அதற்கான உத்தரவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா பிறப்பித்துள்ளார். இலங்கையில் 30 ஆண்டு காலம் உள்நாட்டு போர் நடைபெற்றது. அதன் பின்னர் முதன் முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா கண்டியை சேர்ந்தவர். அங்குள்ள ரினிட்டி கல்லூரியில் ஆரம்ப கல்வியை முடித்தார். பின்னர் கடற்படையின் திரிகோணமலை கல்லூரியில் கெடட் அதிகாரி பட்டப்படிப்பை முடித்தார்.
ராஜபக்சே ஆட்சியின் போது அவரது தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்த பயவினால் ஓரம் கட்டப்பட்டார். தற்போது ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிபர் மைத்ரிபால, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான தேசிய அரசு பதவியேற்றதும் முக்கிய பதவி பெற்றுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்