என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய விசாரணை கமிஷன் முன் ஆஜராக நவாஸ் ஷெரிப் - மகன்கள் மறுப்பு
Byமாலை மலர்18 Aug 2017 7:43 AM GMT (Updated: 18 Aug 2017 7:43 AM GMT)
பனாமா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் கமிஷன் முன்னர் நானும் எனது மகன்களும் ஆஜராக மாட்டோம் என்று ஆஜராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இந்நிலையில், சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது மீண்டும் விரிவான விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் நாட்டின் தார்மீக பொறுப்பு கமிஷனுக்கு தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து சமீபத்தில் மூன்று மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான் மற்றும் ஷேக் ரஷித், சிராஜுல் ஹக் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ததற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த மனுக்கள் அமைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், அரபு நாடுகளில் பணியாற்றுவதற்கான விசாவை நவாஸ் ஷெரிப் பெற்றிருந்ததாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கான ஆவணங்களும் இந்த மனுக்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லாகூரில் உள்ள தார்மீக பொறுப்பு கமிஷன் அலுவலகத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது இரு மகன்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், நானும் எனது மகன்களும் ஆஜராக மாட்டோம் என்று ஆஜராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் நான் தாக்கல் செய்துள்ள முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு வரும்வரை இந்த விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதேபோல் நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், நவாஸ் ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இந்நிலையில், சிறப்பு கூட்டு புலனாய்வு குழு நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்ட விபரங்கள் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த மாதம் 28-ம் தேதி அவர் பதவியை விட்டு விலகினார். அவர்மீது மீண்டும் விரிவான விசாரணை நடத்துமாறு பாகிஸ்தான் நாட்டின் தார்மீக பொறுப்பு கமிஷனுக்கு தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரிப் அந்த உத்தரவை எதிர்த்து சமீபத்தில் மூன்று மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தார்.
பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் இம்ரான் கான் மற்றும் ஷேக் ரஷித், சிராஜுல் ஹக் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ததற்கு பதில் அளிக்கும் வகையில் இந்த மனுக்கள் அமைந்துள்ளதாக தெரிகிறது.
மேலும், அரபு நாடுகளில் பணியாற்றுவதற்கான விசாவை நவாஸ் ஷெரிப் பெற்றிருந்ததாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகளுக்கு விளக்கம் அளிப்பதற்கான ஆவணங்களும் இந்த மனுக்களுடன் இணைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், லாகூரில் உள்ள தார்மீக பொறுப்பு கமிஷன் அலுவலகத்தில் இன்று நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது இரு மகன்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், நானும் எனது மகன்களும் ஆஜராக மாட்டோம் என்று ஆஜராக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் நான் தாக்கல் செய்துள்ள முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு வரும்வரை இந்த விசாரணையில் பங்கேற்கப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X