என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூரில் இங்கிலாந்து நாட்டினர் 3 பேருக்கு சிறை தண்டனை
Byமாலை மலர்16 Aug 2017 12:47 AM GMT (Updated: 16 Aug 2017 12:48 AM GMT)
சிங்கப்பூரில் குடிபோதையில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் இங்கிலாந்து நாட்டினர் 3 பேருக்கு 6½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
சிங்கப்பூர்:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் கோங் தாம் தான், வு தாய் சன், மைக்கேல் லி. இவர்கள் 3 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த இசை விழாவில் பங்கேற்க சென்றிருந்தனர்.
அப்போது இரவு விடுதி ஒன்றில் அவர்களது நண்பர் ஒருவர், ஒரு பெண்ணை சந்தித்திருக்கிறார். அந்தப் பெண்ணை அவர் அழைத்துக்கொண்டு அங்குள்ள ஓட்டலில் வைத்து, அவர் சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
இதையறிந்த அவரது நண்பர்கள் 3 பேரும், குடிபோதையில் நினைவு தப்பிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அத்துமீறி பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பியபோது அவரது அருகில் மைக்கேல் லி படுத்திருப்பதை கண்டார். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு லியும், அவரது நண்பர்கள் 2 பேரும் தன்னை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, அங்குள்ள கோர்ட்டில் நடந்தது.
விசாரணையின்போது, அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா 6½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும், அவர்களுக்கு தலா 8 பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள் கோங் தாம் தான், வு தாய் சன், மைக்கேல் லி. இவர்கள் 3 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த இசை விழாவில் பங்கேற்க சென்றிருந்தனர்.
அப்போது இரவு விடுதி ஒன்றில் அவர்களது நண்பர் ஒருவர், ஒரு பெண்ணை சந்தித்திருக்கிறார். அந்தப் பெண்ணை அவர் அழைத்துக்கொண்டு அங்குள்ள ஓட்டலில் வைத்து, அவர் சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டுள்ளார்.
இதையறிந்த அவரது நண்பர்கள் 3 பேரும், குடிபோதையில் நினைவு தப்பிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அத்துமீறி பலாத்காரம் செய்தனர். அந்தப் பெண்ணுக்கு நினைவு திரும்பியபோது அவரது அருகில் மைக்கேல் லி படுத்திருப்பதை கண்டார். அப்போதுதான் அந்தப் பெண்ணுக்கு லியும், அவரது நண்பர்கள் 2 பேரும் தன்னை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை, அங்குள்ள கோர்ட்டில் நடந்தது.
விசாரணையின்போது, அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். அவர்களுக்கு தலா 6½ ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும், அவர்களுக்கு தலா 8 பிரம்படி தரவும் உத்தரவிடப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X