என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நைஜீரியா: போகோ ஹராம் பெண் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 27 பேர் பலி
Byமாலை மலர்15 Aug 2017 11:36 PM GMT (Updated: 15 Aug 2017 11:36 PM GMT)
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அபுஜா:
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாத இயக்கம் பெருமளவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அங்குள்ள கிராமத்தினரை பிணையக் கைதிகளாக பிடித்து அரசிடம் பேரம் பேசுவது உள்ளிட்ட அட்டூழியங்களில் இந்த இயக்கம் ஈடுபட்டு வருகிறது. இவர்களை வேட்டையாடும் பணியில் பண்ணாட்டு ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான மைதுகுரி என்ற நகரின் பக்கத்தில் இருக்கும் கோண்டுகா கிராமத்தில் உள்ள அகதிகள் முகாம் அருகே நேற்று அந்த இயக்கத்தைச் சேர்ந்த இரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டிவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த கோர தாக்குதலில் அங்கிருந்த 27 பேர் பலியானதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போகோ ஹராம் தீவிரவாத இயக்கம் இதுவரை நடத்தியுள்ள தற்கொலைப்படை தாக்குதலை பெண் தீவிரவாதிகளே அதிகளவில் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் இயக்கத்தின் பெண் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாத இயக்கம் பெருமளவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அங்குள்ள கிராமத்தினரை பிணையக் கைதிகளாக பிடித்து அரசிடம் பேரம் பேசுவது உள்ளிட்ட அட்டூழியங்களில் இந்த இயக்கம் ஈடுபட்டு வருகிறது. இவர்களை வேட்டையாடும் பணியில் பண்ணாட்டு ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு பகுதியான மைதுகுரி என்ற நகரின் பக்கத்தில் இருக்கும் கோண்டுகா கிராமத்தில் உள்ள அகதிகள் முகாம் அருகே நேற்று அந்த இயக்கத்தைச் சேர்ந்த இரு பெண் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டிவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த கோர தாக்குதலில் அங்கிருந்த 27 பேர் பலியானதாகவும், 83 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போகோ ஹராம் தீவிரவாத இயக்கம் இதுவரை நடத்தியுள்ள தற்கொலைப்படை தாக்குதலை பெண் தீவிரவாதிகளே அதிகளவில் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X