search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கப்பூர் இந்தியருக்கு ரூ.18 கோடி இழப்பீடு - பணிபுரிந்த நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவு
    X

    சிங்கப்பூர் இந்தியருக்கு ரூ.18 கோடி இழப்பீடு - பணிபுரிந்த நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவு

    சிங்கப்பூர் இந்தியர் ரமேஷ் கிருஷ்ணனுக்கு சுமார் ரூ.18 கோடி இழப்பீடு வழங்குமாறு ஏ.எக்ஸ்.ஏ. நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர் ரமேஷ் கிருஷ்ணன் (வயது 47). இவர், சிங்கப்பூரில் உள்ள ஏ.எக்ஸ்.ஏ. என்ற நிதிசார்ந்த சேவைகள் வழங்கும் நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றி வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு விலகினார். அவர் அந்த நிறுவனத்திடம் தன்னைப்பற்றிய நற்சான்றிதழ் கேட்டபோது, அவரது பணித்திறன் சரியில்லை என்று அந்நிறுவனம் சான்றிதழ் அளித்தது. இதனால், ரமேஷ் கிருஷ்ணன் வேறு ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர முடியாமல் போய்விட்டது.

    இதையடுத்து, அவர் இழப்பீடு கோரி, சிங்கப்பூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவ்வழக்கு 2015-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    ரமேஷ் கிருஷ்ணனுக்கு 40 லட்சம் சிங்கப்பூர் டாலர் (சுமார் ரூ.18 கோடி) இழப்பீடு வழங்குமாறு ஏ.எக்ஸ்.ஏ. நிறுவனத்துக்கு மேல்முறையீட்டு நீதிபதி ஜார்ஜ் வெய் உத்தரவிட்டார். ஊழியரை பாதுகாக்க வேண்டிய கடமையை அந்நிறுவனம் மீறிவிட்டதாக அவர் கூறினார். 
    Next Story
    ×