search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் தொகுதியில் களமிறங்கும் ஹபீஸ் சையது கட்சி
    X

    பாகிஸ்தான்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப் தொகுதியில் களமிறங்கும் ஹபீஸ் சையது கட்சி

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது தொடங்கியுள்ள கட்சி போட்டியிடுகிறது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது தொடங்கியுள்ள கட்சி போட்டியிடுகிறது.

    பனாமாகேட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வெற்றி பெற்ற லாகூர் பாராளுமன்ற தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது.



    இந்த தேர்தலில் ஆளும் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவி போட்டியிடுவார் என கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையது தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சி இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் ஆளுங்கட்சி சார்பாக நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் சபாஸ் ஷெரிப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பஞ்சாப் மாகாண முதல்வராக இருப்பதால் அவர் இந்த பதவிக்கு போட்டியிட்டால் அந்த மாகாணத்தில் கட்சியின் பலம் குறையும் என கட்சியின் முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஹபீஸ் சையதுவின் கட்சி புதிதாக களமிறங்குவதால் அக்கட்சிக்கு மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.
    Next Story
    ×