என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து - வங்கதேசம் வருமாறு அழைப்பு
Byமாலை மலர்6 Aug 2017 4:38 PM GMT (Updated: 6 Aug 2017 4:39 PM GMT)
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
டாக்கா:
துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10-ந் தேதி நிறைவடைய உள்ள நிலையில், புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியை விட இரு மடங்கி வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்ட முன்னாள் நகர்ப்புற வளர்ச்சி மந்திரியான வெங்கையா நாயுடு அபார வெற்றி பெற்றார்.
இந்நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுவுக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்தார். மேலும் வங்கதேசம் வருமாறு வெங்கையா நாயுடுவுக்கு ஹசீனா அழைப்பு விடுத்தார்.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவு தற்போது சிறப்பாக உள்ளதாகவும், இனி வரும் நாட்களில் மேலும் உறவு வலுப்பெறும் என்று அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X