search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபர்
    X

    காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபர்

    அமெரிக்காவில் காதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓஹியோ:

    அமெரிக்காவில் உள்ள ஓஹியோவை சேர்ந்தவர் அர்துரோ நோவா (வயது 28). இவர், தனது காதலி ‌ஷனான் கிரேவ்ஸ் என்பவருடன் அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.

    சில நாட்களாக காதலி ‌ஷனான் கிரேவ்சை காணவில்லை. அதே நேரத்தில் புதிய காதலி ஒருவரை அழைத்து வந்து அவருடன் அர்துரோ நோவா தங்கி இருந்தார்.

    வீட்டில் பெரிய வடிவிலான பிரிட்ஜ் ஒன்று இருந்தது. அந்த பிரிட்ஜ் மேல்மாடியில் இருப்பதால் அடிக்கடி பழுதாவதாகவும் எனவே, கீழ் மாடியில் உள்ள ஒரு அறையை தனக்கு ஒதுக்கி தரும்படி வீட்டு உரிமையாளரிடம் கேட்டார்.

    எனவே, அவருக்கு கீழ் தளத்தில் உள்ள அறையை ஒதுக்கி கொடுத்தார். அங்கு அவர் பிரிட்ஜை கொண்டு வைத்தார்.

    ஆனால், அந்த பிரிட்ஜ் திறக்க முடியாத அளவுக்கு பல்வேறு வகை பூட்டுகளை வைத்து பூட்டப்பட்டு இருந்தது. எனவே, வீட்டு உரிமையாளருக்கு சந்தேகம் வந்தது. இதனால் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    போலீசார் பிரிட்ஜை திறந்து பார்த்த போது, உள்ளே பல பொட்டலங்கள் இருந்தன. அதை பிரித்து பார்த்தனர். அதற்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன.

    தனது முதல் காதலி ‌ஷனான் கிரேவ்சை கொன்று அவரை துண்டு துண்டாக வெட்டி பார்சல் செய்து பிரிட்ஜில் வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்தனர். இந்த கொலைக்கு புதிய காதலியும் உடந்தையாக இருந்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×