என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோமாலியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 39 ஆஸ்திரேலிய வீரர்கள் பலி
Byமாலை மலர்31 July 2017 5:54 AM GMT (Updated: 31 July 2017 5:54 AM GMT)
சோமாலியாவில் அமைதிப்படையைச் சேர்ந்த ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொகாடிசு:
சோமாலியாவில் அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவுடன் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவத்துடன் இணைந்து ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்பிரிக்க யூனியன் ராணுவத்தில் 22 ஆயிரம் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எதிராக நேற்று அல்ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
மொகாடிசு அருகே புலாமரீர் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்கினர்.
அதில் 39 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் பலியாகினர். இத்தகவலை அல்ஷபாப் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்டியாசிஸ் அபு முசாப் தெரிவித்தார்.
ஆனால் இதை ஆஸ்திரேலிய ராணுவம் மறுத்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறியுள்ளது. ஆனால் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்கள் தங்களிடம் இருப்பதாக தீவிரவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவில் அல் கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவுடன் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவத்துடன் இணைந்து ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆப்பிரிக்க யூனியன் ராணுவத்தில் 22 ஆயிரம் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய ராணுவத்துக்கு எதிராக நேற்று அல்ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
மொகாடிசு அருகே புலாமரீர் மாவட்டத்தில் ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவற்றின் மீது தீவிரவாதிகள் தாக்கினர்.
அதில் 39 ஆஸ்திரேலிய ராணுவ வீரர்கள் பலியாகினர். இத்தகவலை அல்ஷபாப் தீவிரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர் அப்டியாசிஸ் அபு முசாப் தெரிவித்தார்.
ஆனால் இதை ஆஸ்திரேலிய ராணுவம் மறுத்துள்ளது. இரு தரப்புக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறியுள்ளது. ஆனால் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்களின் உடல்கள் தங்களிடம் இருப்பதாக தீவிரவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X