என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும்: புதின் அதிரடி
Byமாலை மலர்27 July 2017 7:54 PM GMT (Updated: 27 July 2017 7:54 PM GMT)
அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
மாஸ்கோ:
பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளிடம் பேசிய அவர், “நாங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான முறையில் நடந்து வருகிறோம். ஆனால் சில நிகழ்வுகளில் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடைமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இது சர்வதேச உறவுகள் மற்றும் சட்டங்களை அழிக்கிறது” என்றார்.
பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அபாயகரமானதாக விளங்குவதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷியா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது ராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ரஷியா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை அடாவடிக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளிடம் பேசிய அவர், “நாங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படாமல், அமைதியான முறையில் நடந்து வருகிறோம். ஆனால் சில நிகழ்வுகளில் நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடைமுறை ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. இது சர்வதேச உறவுகள் மற்றும் சட்டங்களை அழிக்கிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X