search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கையில் தமிழ் நீதிபதி மீது கொலை முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
    X

    இலங்கையில் தமிழ் நீதிபதி மீது கொலை முயற்சி - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

    இலங்கையின் ஜாப்னா நகரில் தமிழக நீதிபதி மீது மர்ம நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    கொழும்பு:

    வடக்கு  மாகாணத்தின் தலைநகரான ஜாப்னாவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் முக்கிய தமிழ் நீதிபதியாக உள்ளவர் மாணிக்கவாசகர் இளஞ்செழியன். தைரியமான நீதிபதி என்று பெயர் பெற்றவர்.

    இந்நிலையில், ஜாப்னா நகரில் தமிழ் நீதிபதியான மாணிக்கவாசகர் மீது மர்ம நபர் கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்டார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    நீதிபதி மாணிக்கவாசகரின் பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்த மர்ம நபர் சுட ஆரம்பித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதில் நீதிபதிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், போலீசுக்கு காயம் ஏற்பட்டது.

    ஜாப்னா நகரில் உள்ள நல்லூர் ஜங்சனில் போக்குவரத்து நெரிசலில் அவரது கார் மாட்டிக் கொண்ட போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    மக்கள் நடமாட்டம் அதிமுள்ள இடத்தில் தமிழ் நீதிபதி மீது கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×