என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்களை தாக்கும் வீடியோ வைரலானது: சவுதி இளவரசர் கைது
Byமாலை மலர்21 July 2017 12:35 PM GMT (Updated: 21 July 2017 12:35 PM GMT)
சவுதி அரேபியா இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ் பொதுமக்களை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாய்:
சவுதி அரேபியாவில் பொதுமக்களில் சிலரை இளவரசர் அப்துல் அஜிஸ் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இளவரசரால் தாக்கப்பட்ட நபர்கள் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட செல்வது தெரிகிறது. அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போன்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இதுபற்றி விசாரணை நடத்தும்படி மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.
இதையடுத்து இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இளவரசருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணை முடிந்து கோர்ட் உத்தரவு வரும் வரை, குற்றம்சாட்டப்பட்ட யாரையும் விடுதலை செய்யக்கூடாது என மன்னர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே தாக்குதல்கள் நடைபெற்றதாக காட்டப்படும் வீடியோ காட்சிகளில் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகங்களும் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவில் பொதுமக்களில் சிலரை இளவரசர் அப்துல் அஜிஸ் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், இளவரசரால் தாக்கப்பட்ட நபர்கள் படுகாயமடைந்து ரத்தம் சொட்ட செல்வது தெரிகிறது. அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது போன்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இதுபற்றி விசாரணை நடத்தும்படி மன்னர் சல்மான் உத்தரவிட்டார்.
இதையடுத்து இளவரசர் சவுத் அப்துல் அஜிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இளவரசருடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணை முடிந்து கோர்ட் உத்தரவு வரும் வரை, குற்றம்சாட்டப்பட்ட யாரையும் விடுதலை செய்யக்கூடாது என மன்னர் உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனிடையே தாக்குதல்கள் நடைபெற்றதாக காட்டப்படும் வீடியோ காட்சிகளில் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகங்களும் எழுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X