search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓடும் ரெயிலில் பெண் மானபங்கம்: சிங்கப்பூரில் தமிழ் அதிகாரிக்கு 9 வாரம் சிறை
    X

    ஓடும் ரெயிலில் பெண் மானபங்கம்: சிங்கப்பூரில் தமிழ் அதிகாரிக்கு 9 வாரம் சிறை

    சிங்கப்பூரில் ஓடும் ரெயிலில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை தந்து மானபங்கம் செய்த தமிழ் அதிகாரிக்கு 9 வாரம் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர், ராஜகோபால சவுந்தரராஜ பன்னீர் செல்வன் (வயது 46). தமிழர்.

    இவர் கடந்த மார்ச் மாதம், அங்கு ஓடும் ரெயிலில் 28 வயது பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை தந்து, மானபங்கம் செய்தார்.

    இனியும் அவர் எந்தப் பெண்ணையும் இதுபோன்று பாலியல் ரீதியில் தொல்லை செய்யக்கூடாது என கருதிய அந்தப்பெண், போலீசில் இதுபற்றி புகார் செய்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு அங்குள்ள மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் யிவென், குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜகோபால சவுந்தரராஜ பன்னீர் செல்வன் இப்படி ரெயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவதை வழக்கமாக கொண்டுள்ளார் என குறிப்பிட்டார்.

    விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை ராஜகோபால சவுந்தரராஜ பன்னீர் செல்வன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 9 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சாமுவேல் சுவா தீர்ப்பு அளித்தார். 
    Next Story
    ×