search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிக்ஸ் என்.எஸ்.ஏ. மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்கிறார் அஜித் தோவல்
    X

    பிரிக்ஸ் என்.எஸ்.ஏ. மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்கிறார் அஜித் தோவல்

    சீனாவின் பெய்ஜிங் நகரில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீனா செல்ல உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா, சினா, ரஷ்யா, பிரேசில் மட்டும் தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் பங்குவகிக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் சீனாவின் பெய்ஜிங் நகரில் வருகிற 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

    இம்மாநாட்டில் பங்குபெறுவதற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பக்லே அறிவித்துள்ளார். 

    இந்தியா - சீனா இடையே சமீபகாலமாக நிலவிவரும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து நல்ல முடிவுகள் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×