search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளத்தில் போதைப் பொருள் கடத்திய 4 இந்தியர்கள் கைது: ஓட்டலில் நடந்த சோதனையில் சிக்கினர்
    X

    நேபாளத்தில் போதைப் பொருள் கடத்திய 4 இந்தியர்கள் கைது: ஓட்டலில் நடந்த சோதனையில் சிக்கினர்

    நேபாளத்தில் போதைப் பொருள் கடத்திய 4 இந்தியர்கள் உள்பட 7 பேரை நேபாள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
    காத்மண்டு:

    நேபாள நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மகவான்புர் மாவட்டத்தில் போலீசார் இன்று சோதனை செய்து கொண்டிருந்தனர். மகவான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு அறையில்
    போதைப் பொருட்களுடன் 7 பேர் சிக்கினர்.

    அவர்களிடம் இருந்து 30 கிலோ எடையுள்ள ஆஷிஷ் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள், இந்திய பதிவெண் கொண்ட வாகனம், 6 மொபைல் போன்கள் மற்றும் 33 ஆயிரம் மதிப்பிலான இந்திய ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர்களை அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்களில் 4 பேர் இந்தியர்கள், மற்ற 3 பேர் நேபாளிகள் என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×