என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பனாமா கேட்: கூட்டுக்குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீப் மனு
Byமாலை மலர்17 July 2017 8:04 PM GMT (Updated: 17 July 2017 8:04 PM GMT)
பனாமா கேட் விவகாரத்தில் தன் மீது அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக்குழு அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
பனாமா கேட் விவகாரத்தில் தன் மீது அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக்குழு அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், இவ்வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது ’கூட்டுவிசாரணைக்குழு அளித்த அறிக்கை ஒரு பக்கச்சார்பானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்’ என நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இம்மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், நவாஸ் ஷெரீப் தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும் போது, ’கூட்டுக் குழு சர்ச்சைக்குரிய அறிக்கையை அளித்துள்ளது. நமது எதிராளிகள் கூறி வரும் அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்தான் இந்த அறிக்கை முழுவதும் இருக்கிறது’ என குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பனாமா கேட் விவகாரத்தில் தன் மீது அமைக்கப்பட்ட கூட்டு விசாரணைக்குழு அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, 'மொசாக் பொன்சேகா' சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப்பின் பெயரும் இருந்ததால், அவருக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வந்தது.
இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரிப், அவரது இரு மகன்கள், மகள் மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். ஷெரிப்புக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் என அனைவரிடமும் விசாரணை முடிந்தது.
இதைதொடர்ந்து, சிறப்பு கூட்டு புலனாய்வு குழு, தனது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், இவ்வழக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது ’கூட்டுவிசாரணைக்குழு அளித்த அறிக்கை ஒரு பக்கச்சார்பானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்’ என நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர்கள் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதனையடுத்து, இம்மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர், நவாஸ் ஷெரீப் தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும் போது, ’கூட்டுக் குழு சர்ச்சைக்குரிய அறிக்கையை அளித்துள்ளது. நமது எதிராளிகள் கூறி வரும் அவதூறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்தான் இந்த அறிக்கை முழுவதும் இருக்கிறது’ என குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X