என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி-20 உச்சி மாநாட்டின்போது ஜெர்மனியில் புதின் - டிரம்ப் முதன்முறையாக சந்திப்பு
Byமாலை மலர்30 Jun 2017 11:59 AM GMT (Updated: 30 Jun 2017 11:59 AM GMT)
ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் அடுத்த வாரம் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டின்போது ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முதன்முறையாக சந்தித்து பேசுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முதன்முறையாக நேரில் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் மெக்மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மெக்மாஸ்டர் கூறியதாவது:-
ஜெர்மனி நாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்னதாக அமெரிக்கா - ரஷியா நாடுகளுக்கு இடையில் அமெரிக்காவின் ஒவ்வொரு அரசு துறையின் சார்பாக உள்ள முக்கிய பிரச்சனைகளை உடனடியாக ஆய்வு செய்து குறிப்புகளை சேகரிக்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவை சீர்குலைக்க முயற்சிக்கும் ரஷியாவின் நடவடிக்கை, சைபர் தாக்குதல் அச்சுறுத்தல், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிறநாடுகளில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மிக வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையில் போர் மூளுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, போருக்கான பாதையை தேர்வு செய்ய விடாமல் ரஷியாவை தடுத்து நிறுத்தி அறிவுறுத்துவது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது.
அடுத்ததாக, இரு நாடுகளுக்கு இடையில் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை அதிகப்படுத்துவது என்று ஆய்வு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, வடகொரியா விவகாரம், நாடுகடந்து விஸ்வரூபம் எடுத்துவரும் தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டியுள்ளது. மேலும், ஜி-20 மாநாட்டுக்கு இடையில் ஜெர்மனி, பிரிட்டான், ஜப்பான், தென்கொரியா, சீனா, மெக்சிகோ, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ரஷியாவும், அவரது ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் போராளி குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உதவி வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. மேலும், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து ரஷிய உளவுப்படை செயலாற்றியதாக தெரிய வந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெர்மனியில் சந்தித்து நடத்தவுள்ள ஆலோசனை மிக முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி-20 எனப்படும் வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் ஜூலை மாதம் 7-8 தேதிகளில் ஜெர்மனி நாட்டின் ஹேம்பர்க் நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வரும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முதன்முறையாக நேரில் சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினண்ட் ஜெனரல் மெக்மாஸ்டர் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய மெக்மாஸ்டர் கூறியதாவது:-
ஜெர்மனி நாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்திப்பதற்கு முன்னதாக அமெரிக்கா - ரஷியா நாடுகளுக்கு இடையில் அமெரிக்காவின் ஒவ்வொரு அரசு துறையின் சார்பாக உள்ள முக்கிய பிரச்சனைகளை உடனடியாக ஆய்வு செய்து குறிப்புகளை சேகரிக்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்காவை சீர்குலைக்க முயற்சிக்கும் ரஷியாவின் நடவடிக்கை, சைபர் தாக்குதல் அச்சுறுத்தல், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிறநாடுகளில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக ஆய்வு செய்யுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மிக வலிமை வாய்ந்த நாடுகளுக்கு இடையில் போர் மூளுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். எனவே, போருக்கான பாதையை தேர்வு செய்ய விடாமல் ரஷியாவை தடுத்து நிறுத்தி அறிவுறுத்துவது மிக முக்கியமான பிரச்சனையாக உள்ளது.
அடுத்ததாக, இரு நாடுகளுக்கு இடையில் எந்தெந்த துறைகளில் கூட்டுறவை அதிகப்படுத்துவது என்று ஆய்வு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, வடகொரியா விவகாரம், நாடுகடந்து விஸ்வரூபம் எடுத்துவரும் தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டியுள்ளது. மேலும், ஜி-20 மாநாட்டுக்கு இடையில் ஜெர்மனி, பிரிட்டான், ஜப்பான், தென்கொரியா, சீனா, மெக்சிகோ, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களையும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு ரஷியாவும், அவரது ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் போராளி குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் உதவி வருகின்றன. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. மேலும், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்ப்பை ஆதரித்து ரஷிய உளவுப்படை செயலாற்றியதாக தெரிய வந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஜெர்மனியில் சந்தித்து நடத்தவுள்ள ஆலோசனை மிக முக்கியமான சந்திப்பாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X