search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள் - வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
    X

    கயானாவில் இருந்து ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள் - வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

    தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
    கெய்னே:

    தொலைத்தொடர்பு, டிடிஹெச் (DTH) சேவை மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை லத்தீன் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இஸ்ரோ அனுப்பியது. 

    இன்று அதிகாலை 2.29 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. பின்னர் ஜிசாட்-17 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 

    அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்பதால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்பட்டது.



    ஜிசாட்-17 செயற்கைகோள் 3,477 கிலோ எடைகொண்டது. இதன் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். இது இந்தியாவின் 18வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×