search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் மொழியில் அமெரிக்கா பேசுகிறது: மோடி - டிரம்ப் சந்திப்பால் கடுப்படைந்த பாக். மந்திரி பேட்டி
    X

    இந்தியாவின் மொழியில் அமெரிக்கா பேசுகிறது: மோடி - டிரம்ப் சந்திப்பால் கடுப்படைந்த பாக். மந்திரி பேட்டி

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளதால் கடுப்படைந்துள்ள பாகிஸ்தான் உள்துறை மந்திரி, இந்தியாவின் மொழியில் அமெரிக்கா பேசுகிறது என பேட்டியளித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.

    ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான சையத் சலாவுதீன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் உள்ளான். இந்தியா மீது நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட இவன் பதன்கோட் தாக்குதலிலும் பங்கேற்றவன். பாகிஸ்தான் உதவியுடன் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகிறான்.

    இதற்கிடையே, சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. அமெரிக்கர்கள் அவனுடன் எந்த ஒரு தொடர்பையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க நீதித்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலாவுதீனுக்கு சொந்தமான சொத்துக்கள் இருப்பின் அவை முடக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் கடுப்படைந்துள்ள பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார், ”இந்தியாவின் மொழியில் அமெரிக்கா பேசுகிறது” என பேட்டியளித்துள்ளார். மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,” காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதனை எதிர்த்து போரிடுபவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து சர்வதேச சமூகத்தில் அவர்களை இந்தியா அடையாளப்படுத்துகிறது. சர்வதேச நாடுகளுக்கு காஷ்மீரிகளின் ரத்தம் ஒரு பொருட்டல்ல. எந்த மனித உரிமை 
    விதிகளும் அங்கு எடுபடவில்லை” என கூறியுள்ளார்.

    ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவனான சையத் சலாவுதீனை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×