என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈராக்கில் வான்தாக்குதல்: ஐ.எஸ். உள்ளூர் தளபதிகள் 3 பேர் பலி - 3 பாதுகாவலர்களும் உயிரிழப்பு
Byமாலை மலர்26 Jun 2017 12:03 AM GMT (Updated: 26 Jun 2017 12:03 AM GMT)
ஈராக்கில் வான்தாக்குதலில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மொசூல்:
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்க பலமாக அமெரிக்க கூட்டுப்படைகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு திக்ரிஸ் ஆற்றின் கிழக்கு கரையில், மொசூல் நகருக்கு எதிரே உள்ள தால் அபார் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதிகள் பதுங்கி இருந்து, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பதாக ஈராக் ராணுவத்துக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குறிப்பிட்ட இடத்தை குறிவைத்து போர் விமானம் ஒன்று குண்டு வீச்சு நடத்தியது.
இதில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கில் நினிவே மாகாணத்தில் தால் அபார், மிகப்பெரிய மாவட்டம் என்பதும், இதை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் வசப்படுத்தி விட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தால் அபார் மாவட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்காக ஈராக் ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்க பலமாக அமெரிக்க கூட்டுப்படைகள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு திக்ரிஸ் ஆற்றின் கிழக்கு கரையில், மொசூல் நகருக்கு எதிரே உள்ள தால் அபார் நகரில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உள்ளூர் தளபதிகள் பதுங்கி இருந்து, ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருப்பதாக ஈராக் ராணுவத்துக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த குறிப்பிட்ட இடத்தை குறிவைத்து போர் விமானம் ஒன்று குண்டு வீச்சு நடத்தியது.
இதில் சிக்கி ஐ.எஸ். அமைப்பின் உள்ளூர் தளபதிகள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பில் அவர்களது பாதுகாவலர்கள் 3 பேரும் பலியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஈராக்கில் நினிவே மாகாணத்தில் தால் அபார், மிகப்பெரிய மாவட்டம் என்பதும், இதை 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் வசப்படுத்தி விட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தால் அபார் மாவட்டத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்காக ஈராக் ராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X