என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏமன் நாட்டில் 2 மாதத்தில் காலராவுக்கு 1,300 பேர் பலி
Byமாலை மலர்25 Jun 2017 5:46 AM GMT (Updated: 25 Jun 2017 5:46 AM GMT)
ஏமன் நாட்டில் 2 மாதத்தில் காலரா நோய்க்கு 1,300 பேர் உயிர் இழந்துள்ளனர். 2 லட்சம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சனா:
அரபு நாடுகளில ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஹூதி புரட்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். அவர்கள் தலைநகரம் சனா உள்பட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
உள்நாட்டு சண்டையால் 1 கோடியே 80 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு போதிய இடமில்லை. ஆங்காங்கே கூடாரங்களில் தங்கி இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளோ மற்ற சுகாதார வசதிகளோ கிடைக்கவில்லை.
இதனால் கடந்த மாதங்களுக்கு முன்பு பல இடங்களில் காலரா நோய் ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்துவதற்கு உரிய மருத்துவ குழுக்கள் இல்லை. இதனால் தொடர்ந்து காலரா நோய் பரவி வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக காலரா நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
இதுவரை 2 லட்சம் பேரை நோய் தாக்கி உள்ளது. 1300 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் 4-ல் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர். தொடர்ந்து நிலை மோசமாக உள்ளது.
எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உரிய ஊட்ட சத்துணவு கிடைக்காமல் 2 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரபு நாடுகளில ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஹூதி புரட்சி படையினர் போரிட்டு வருகிறார்கள். அவர்கள் தலைநகரம் சனா உள்பட பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
உள்நாட்டு சண்டையால் 1 கோடியே 80 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு போதிய இடமில்லை. ஆங்காங்கே கூடாரங்களில் தங்கி இருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளோ மற்ற சுகாதார வசதிகளோ கிடைக்கவில்லை.
இதனால் கடந்த மாதங்களுக்கு முன்பு பல இடங்களில் காலரா நோய் ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்துவதற்கு உரிய மருத்துவ குழுக்கள் இல்லை. இதனால் தொடர்ந்து காலரா நோய் பரவி வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக காலரா நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
இதுவரை 2 லட்சம் பேரை நோய் தாக்கி உள்ளது. 1300 பேர் உயிர் இழந்துள்ளனர். இவர்களில் 4-ல் ஒரு பங்கினர் குழந்தைகள் ஆவர். தொடர்ந்து நிலை மோசமாக உள்ளது.
எனவே, உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உரிய ஊட்ட சத்துணவு கிடைக்காமல் 2 கோடியே 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X