என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காள தேசத்தில் 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 22 பேர் பலி
Byமாலை மலர்21 Jun 2017 12:34 AM GMT (Updated: 21 Jun 2017 12:34 AM GMT)
வங்காள தேசத்தில் 18, 19 ஆகிய இரு தேதிகளில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்தனர் என்று வங்காளதேச அரசு நேற்று அறிவித்தது
டாக்கா:
வங்காள தேசத்தில் ஆண்டுதோறும் மின்னலுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த ஆண்டு அங்கு மின்னலுக்கு 200 பேர் பலியாகினர். குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் ஒரே நாளில் மின்னலுக்கு 82 பேர் பலியாகினர். ஆனால் பலி இன்னும் அதிகம், இது குறித்த தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்போது பருவ நிலை மாற்றம், இந்த மின்னல் தாக்குதலை மேலும் அதிகரிக்கச்செய்து வருகிறது.
காடுகளை அழித்ததும், பனைமரம் போன்ற உயரமான மரங்களை வெட்டியதும் மின்னல் தாக்குதலுக்கு மேலும் காரணங்களாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 18, 19 ஆகிய இரு தேதிகளில், 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்தனர் என்று வங்காளதேச அரசு நேற்று அறிவித்தது.ஒரு தம்பதியர் தங்களுடைய மகளுடன் வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 160-க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், இப்போது மின்னல் தாக்கி 22 பேர் பலியாகி இருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வங்காள தேசத்தில் ஆண்டுதோறும் மின்னலுக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது. கடந்த ஆண்டு அங்கு மின்னலுக்கு 200 பேர் பலியாகினர். குறிப்பாக கடந்த ஆண்டு மே மாதம் ஒரே நாளில் மின்னலுக்கு 82 பேர் பலியாகினர். ஆனால் பலி இன்னும் அதிகம், இது குறித்த தகவல்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இப்போது பருவ நிலை மாற்றம், இந்த மின்னல் தாக்குதலை மேலும் அதிகரிக்கச்செய்து வருகிறது.
காடுகளை அழித்ததும், பனைமரம் போன்ற உயரமான மரங்களை வெட்டியதும் மின்னல் தாக்குதலுக்கு மேலும் காரணங்களாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 18, 19 ஆகிய இரு தேதிகளில், 48 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்தனர் என்று வங்காளதேச அரசு நேற்று அறிவித்தது.ஒரு தம்பதியர் தங்களுடைய மகளுடன் வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் வங்காளதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 160-க்கு மேற்பட்டோர் பலியான நிலையில், இப்போது மின்னல் தாக்கி 22 பேர் பலியாகி இருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X