என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊழல் புகார் எதிரொலி: பிரான்ஸ் ராணுவ மந்திரி ராஜினாமா
Byமாலை மலர்20 Jun 2017 1:37 PM GMT (Updated: 20 Jun 2017 1:37 PM GMT)
பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆட்களை நியமினம் செய்வதில் ஊழல் நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரால் அந்நாட்டு பாதுகாப்புத்துறை பெண் மந்திரி சில்வியே கவுலார்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
பாரிஸ்:
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மாக்ரான் தலைமயிலான கட்சியின் கூட்டணியில் உள்ள ’மோடெம்’ என்ற கட்சியை சேர்ந்த சில்வியே கவுலார்ட் என்ற பெண் அந்நாட்டு ராணுவத்துறை மந்திரியாக உள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் ஆட்களை நியமினம் செய்வதில் முன்னர் ஊழல் நடைபெற்றதாக இவர்மீது எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில்,தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக சில்வியே கவுலார்ட் இன்று அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான சில்வியே கவுலார்ட், தன்மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் விரைவில் விசாரணையை சந்திக்க வேண்டியுள்ளதால் இனியும் ராணுவ மந்திரியாக நீடிப்பது சரியல்ல என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X