என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரிய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
Byமாலை மலர்19 Jun 2017 5:43 PM GMT (Updated: 19 Jun 2017 5:43 PM GMT)
சிரிய போர் விமானம் அமெரிக்க விமானப்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாஸ்கோ:
சிரிய போர் விமானம் அமெரிக்க விமானப்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன. மேலும் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அதிபர் பஷல் அல் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின. அப்போது அங்கு ஏற்கனவே முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் தங்களை காப்பாற்றி கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் ஆதாத் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்யா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,”அமெரிக்கா அங்கம் வகிக்கும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பின் விமானமோ, ட்ரோன்களோ மேற்கு எல்லைப்பகுதியில் பறக்கும் போது அது ரஷ்ய விமான எதிர்ப்பு பீரங்கிகளுக்கு இலக்கு தான்” என அமெரிக்காவுக்கு ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரிய போர் விமானம் அமெரிக்க விமானப்படையால் சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், அதன் ஆதரவு படைகளும் களம் இறங்கியுள்ளன. மேலும் அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ரக்கா உள்ளிட்ட சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு எதிராக அமெரிக்கா படைகள் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அதிபர் பஷல் அல் -ஆசாத் ஆதரவு ராணுவ போர் விமானங்கள் ரக்கா மீது குண்டு வீசி தாக்கின. அப்போது அங்கு ஏற்கனவே முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் ஒரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதற்கு சிரியா கண்டனம் தெரிவித்தது. ஆனால் தங்களை காப்பாற்றி கொள்ளவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் ஆதாத் ராணுவத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்யா, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும்,”அமெரிக்கா அங்கம் வகிக்கும் சர்வதேச ராணுவ கூட்டமைப்பின் விமானமோ, ட்ரோன்களோ மேற்கு எல்லைப்பகுதியில் பறக்கும் போது அது ரஷ்ய விமான எதிர்ப்பு பீரங்கிகளுக்கு இலக்கு தான்” என அமெரிக்காவுக்கு ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X