என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரிப்பு
Byமாலை மலர்18 Jun 2017 5:01 PM GMT (Updated: 18 Jun 2017 5:01 PM GMT)
வங்காளதேசத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
டாக்கா:
வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் பெய்யும் பருவமழையினால் புயல்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவதுண்டு. இந்த வருடம் வங்காளதேசத்தில் மோரா சூறாவளி தாக்கியது. அதனை அடுத்து 2 வாரத்தில் பருவமழை பொழிய தொடங்கியது.
இதில் கடந்த வார தொடக்கத்தில், தென்கிழக்கு ரங்மதி, சிட்டகாங் மற்றும் பந்தர்பன் மலை மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. கடும் மழையினால் பல்வேறு இடங்களில் நீர் உட்புகுந்தது. பல கிராமங்கள் நீரில் மூழ்கின.இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. கனமழை காரணமாக ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
ரங்மதியில் 116 பேரும், சிட்டகாங்கில் 32 பேரும், பந்தர்பன்னில் 6 பேரும், காக்ஸ் பஜார் பகுதியில் 2 பேரும் மற்றும் காக்ரசாரி பகுதியில் ஒருவரும் பலியாகினர்.
வங்காளதேசத்தில் மலை பகுதிகள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் மழை பொழியும்பொழுது அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட வழிவகுக்கிறது என நிபுணர்கள் மற்றும் சுற்று சூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காக்ரசாரி மற்றும் மவுல்விபஜார் மாவட்டங்களில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 3 குழந்தைகள் உள்பட 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வங்காளதேசத்தில் ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் பெய்யும் பருவமழையினால் புயல்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவதுண்டு. இந்த வருடம் வங்காளதேசத்தில் மோரா சூறாவளி தாக்கியது. அதனை அடுத்து 2 வாரத்தில் பருவமழை பொழிய தொடங்கியது.
இதில் கடந்த வார தொடக்கத்தில், தென்கிழக்கு ரங்மதி, சிட்டகாங் மற்றும் பந்தர்பன் மலை மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. கடும் மழையினால் பல்வேறு இடங்களில் நீர் உட்புகுந்தது. பல கிராமங்கள் நீரில் மூழ்கின.இதனால், டாக்கா மற்றும் சிட்டகாங் நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. கனமழை காரணமாக ரங்கமாதி மற்றும் பந்தர்பான் ஆகிய மாவட்டங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
ரங்மதியில் 116 பேரும், சிட்டகாங்கில் 32 பேரும், பந்தர்பன்னில் 6 பேரும், காக்ஸ் பஜார் பகுதியில் 2 பேரும் மற்றும் காக்ரசாரி பகுதியில் ஒருவரும் பலியாகினர்.
வங்காளதேசத்தில் மலை பகுதிகள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் மழை பொழியும்பொழுது அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட வழிவகுக்கிறது என நிபுணர்கள் மற்றும் சுற்று சூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காக்ரசாரி மற்றும் மவுல்விபஜார் மாவட்டங்களில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 3 குழந்தைகள் உள்பட 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X