search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது அமெரிக்கா: ரஷ்யா குற்றச்சாட்டு
    X

    கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது அமெரிக்கா: ரஷ்யா குற்றச்சாட்டு

    அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
    மாஸ்கோ:

    அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

    பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் செய்த தொடர் முயற்ச்சியால் இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவில் சமரசம் ஏற்பட்டது. 

    60 ஆண்டுகளுக்கு பிறகு ஒபாமா கியூபாவில் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்டார். இருநாடுகளிடையே பல்வேறு ராணுவம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. ஒபாமா அரசு கியூபா உடனான பழைய உறவு முறையை மாற்றி புதிதாக கொண்டு வந்தது.

    இத்தகைய சூழலில், ஒபாமா அரசின் பல்வேறு திட்டங்களை ரத்து செய்து வரும் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு கியூபா உடன் ஒபாமா அரசு கொண்டு வந்த புதிய அணுகுமுறைய அதிரடியாக நேற்று ரத்து செய்தது.

    இது தொடர்பாக நேற்று அறிவித்த டிரம்ப், பனிப்போர் காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷியாவுடன் இணைந்து கியூபா மேற்கொண்ட நடவடிக்கைகளை மறக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூப எதிர்ப்பு அணுகுமுறையை கையாள்கிறது என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. 

    இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாஷிங்டன் மேற்கொண்டுள்ள நடவடிக்கை வருந்ததக்கது. கியூபாவுக்கு எங்களது ஆதரவு இருக்கும் என்பதை உறுதி செய்கிறோம். அமெரிக்காவின் புதிய அணுகுமுறை பனிப்போர் காலத்தை ஒத்திருக்கிறது” என்று குறிப்பிடப்படுள்ளது.
    Next Story
    ×