என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூமிக்கு மேல் 550 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் எக்ஸ்ரே டெலஸ்கோப் நிறுவிய சீனா
Byமாலை மலர்16 Jun 2017 5:57 AM GMT (Updated: 16 Jun 2017 5:57 AM GMT)
பூமிக்கு மேல் 500 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை சீனா நிறுவியுள்ளது.
பெய்ஜிங்:
விண்வெளி ஆராய்ச்சியில் சீனா முன்னேறி வருகிறது. அமெரிக்காவுக்கு போட்டியாக விண்வெளியில் தனியாக ஆய்வகம் அமைத்து வருகிறது. சந்திரனுக்கு ஆள் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை நிறுவியுள்ளது.
2.5 டன் எடையுள்ள இந்த டெலஸ்கோப் மார்ச்-4பி ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூகுயான் செயற்கை கோள் மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
எக்ஸ்ரே டெலஸ்கோப்பை பூமிக்கு மேல் 550 கி.மீ. தூரத்தில் மார்ச்-4பி ராக்கெட் தூக்கி சென்று நிலை நிறுத்தியது. அதன் மூலம் வானத்தில் ஏற்படும் கருந்துளைகள், கடுமையான காந்த வயல்கள் மற்றும் வெடித்து சிதறும் காமாகதிர்களை விஞ்ஞானிகள் கண்டறிய முடியும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X