என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் துப்பாக்கி சூடு: பலர் உயிரிழப்பு
Byமாலை மலர்5 Jun 2017 2:35 PM GMT (Updated: 5 Jun 2017 2:35 PM GMT)
அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் இன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலர் பலியாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியாமி:
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோ நகரில் தொழிற்பூங்கா உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதில் பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுருண்டு விழுந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து ஓட்டம்பிடித்தனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலையில் அதிருப்தி அடைந்த ஊழியர் ஒருவர், இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினம் இன்னும் ஒரு வாரத்தில் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இன்று மற்றொரு துப்பாக்கி சூடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் ஆர்லாண்டோ நகரில் தொழிற்பூங்கா உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் ஊழியர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதில் பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சுருண்டு விழுந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து ஓட்டம்பிடித்தனர். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலையில் அதிருப்தி அடைந்த ஊழியர் ஒருவர், இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், அவரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசாரும், எப்.பி.ஐ. அதிகாரிகளும் விரைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் உள்ள இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின் முதலாமாண்டு நினைவு தினம் இன்னும் ஒரு வாரத்தில் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், இன்று மற்றொரு துப்பாக்கி சூடு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X