என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எவரெஸ்ட் சிகரம் அருகே விமானம் விழுந்து நொறுங்கியது: பைலட் உயிரிழப்பு
Byமாலை மலர்27 May 2017 12:52 PM GMT (Updated: 27 May 2017 12:52 PM GMT)
நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் அருகே சரக்கு விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் பைலட் உயிரிழந்தார்.
காத்மாண்டு:
நேபாளத்தின் உள்நாட்டு விமான நிறுவனமான கோமா ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம், எவரெஸ்ட் பிராந்தியத்தில் உள்ள டென்சிங் ஹிலாரி விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது. டென்சிங் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஆயத்தமானபோது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக பாய்ந்து வந்து தரையில் மோதியது.
இதில் விமானம் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து ராணுவம், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சீனியர் பைலட் பரஸ் குமார் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி மனாதர், விமான பணிப்பெண் மகார்ஜன் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தரையிறங்கும்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாளத்தின் உள்நாட்டு விமான நிறுவனமான கோமா ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம், எவரெஸ்ட் பிராந்தியத்தில் உள்ள டென்சிங் ஹிலாரி விமான நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றது. டென்சிங் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஆயத்தமானபோது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக பாய்ந்து வந்து தரையில் மோதியது.
இதில் விமானம் பலத்த சேதம் அடைந்தது. இதையடுத்து ராணுவம், போலீஸ் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சீனியர் பைலட் பரஸ் குமார் ராய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி மனாதர், விமான பணிப்பெண் மகார்ஜன் ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தரையிறங்கும்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X