என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் - 15 வீரர்கள் பலி
Byமாலை மலர்26 May 2017 12:51 PM GMT (Updated: 26 May 2017 12:52 PM GMT)
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத வெறியாட்டத்தில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு படையினரும் போரில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே பகுதியில் உள்ள மற்றொரு ராணுவ முகாமின் மீது கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத வெறியாட்டத்தில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு படையினரும் போரில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதே பகுதியில் உள்ள மற்றொரு ராணுவ முகாமின் மீது கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X