என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் இரட்டை குண்டு வெடிப்பு - மூன்று போலீசார் பலி
Byமாலை மலர்24 May 2017 11:48 PM GMT (Updated: 24 May 2017 11:48 PM GMT)
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜகார்தா:
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்தப்பகுதியில் நேற்று பயங்கர சப்தத்துடன் இரு வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த மூன்று போலீசார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து போலீசார் உள்ளிட்ட 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவினர் அருகிலுள்ள பாண்டென், மேற்கு ஜாவா மாகாணங்களில் இரு வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.
உலகில் முஸ்லிம் மதத்தினர் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த 2002-ம் ஆண்டில் அல்-கொய்தா இயக்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 202 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலைய வளாகத்தில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் மூன்று போலீசார் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்தப்பகுதியில் நேற்று பயங்கர சப்தத்துடன் இரு வெடி குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த மூன்று போலீசார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஐந்து போலீசார் உள்ளிட்ட 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட இருவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவினர் அருகிலுள்ள பாண்டென், மேற்கு ஜாவா மாகாணங்களில் இரு வீடுகளில் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.
உலகில் முஸ்லிம் மதத்தினர் அதிகமாக வசிக்கும் நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த 2002-ம் ஆண்டில் அல்-கொய்தா இயக்கத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 202 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X