என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியர் கைது
Byமாலை மலர்23 May 2017 4:47 PM GMT (Updated: 23 May 2017 4:48 PM GMT)
பாகிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்த பேராசிரியரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
லாகூர்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டில் புகழ்பெற்ற லாகூர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த லாகூர் பல்கலைக்கழகத்தில்தான் மும்பை தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பயிற்று வித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஒருவரை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. மேலும், பேராசிரியரின் உறவினர் ஒருவர் உட்பட நான்கு பேரை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தானில் மக்கள் கூடும் இடங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் பத்திரிகையாளர் என்ற போர்வையில் தாக்குதல் நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படை தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வரைபடமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டில் புகழ்பெற்ற லாகூர் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த லாகூர் பல்கலைக்கழகத்தில்தான் மும்பை தாக்குதலுக்கு சூத்திரதாரியாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் பயிற்று வித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் பேராசிரியராக பணியாற்றி வந்த ஒருவரை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது. மேலும், பேராசிரியரின் உறவினர் ஒருவர் உட்பட நான்கு பேரை பயங்கரவாத எதிர்ப்பு படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தானில் மக்கள் கூடும் இடங்களில் ஆளில்லா விமானங்கள் மூலம் பத்திரிகையாளர் என்ற போர்வையில் தாக்குதல் நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியிருந்ததாகவும் பயங்கரவாத எதிர்ப்பு படை தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் மின்னஞ்சல் மூலம் பேராசிரியர் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் வரைபடமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X