என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா.சபை கண்டனம்
Byமாலை மலர்22 May 2017 6:49 PM GMT (Updated: 22 May 2017 6:49 PM GMT)
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்:
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த அளவில் செல்லும் ஏவுகணையை நேற்று சோதனை செய்ததாக தகவல்கள் வெளியானது.
தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென்கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.
வடகொரியாவின் இந்த அடாவடிக்கு ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி, அந்நாட்டின் மீது வலுவான தடை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வரும் நிலையில், இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அமைப்புகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக பல்வேறு கட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐ.நா., ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முயற்சியில் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த அளவில் செல்லும் ஏவுகணையை நேற்று சோதனை செய்ததாக தகவல்கள் வெளியானது.
தெற்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள புக்சங் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து, தங்கள் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாக தென்கொரியா பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறினர்.
வடகொரியாவின் இந்த அடாவடிக்கு ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “ வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வடகொரியாவின் நடவடிக்கைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கூடி, அந்நாட்டின் மீது வலுவான தடை கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X