என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரான்ஸ் புதிய அதிபர் நாளை இத்தாலி பிரதமருடன் சந்திப்பு
Byமாலை மலர்20 May 2017 12:24 PM GMT (Updated: 20 May 2017 12:24 PM GMT)
பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபர் இம்மானுவேல் மக்ரான், பாரிசில் நாளை இத்தாலி பிரதமர் பாவோலோ ஜென்டிலோனியை சந்தித்து பேச உள்ளார்.
பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ கட்சியின் தலைவர் இம்மானுவேல் மக்ரான் வெற்றி பெற்றார். முன்னாள் பொருளாதார மந்திரியான இவருக்கு ஆதரவாக 66.1 சதவீத வாக்குகள் பதிவாகின. அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணியின் பெண் வேட்பாளர் மரின் லீ பென் 33.9 சதவீத வாக்குகள் பெற்றார்.
புதிய அதிபராக பதவியேற்ற மக்ரான், கடந்த திங்கட்கிழமை பெர்லின் நகரில் ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்புக்கான திட்டம் குறித்து பேசியுள்ளனர். பாரிசில் புதன்கிழமை நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள விருந்து நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமர் பாவோலோ ஜென்டிலோனியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வளர்ச்சிக்கான நெருங்கிய ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது.
பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்க சமீபத்தில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் ‘என் மார்ச்சே’ கட்சியின் தலைவர் இம்மானுவேல் மக்ரான் வெற்றி பெற்றார். முன்னாள் பொருளாதார மந்திரியான இவருக்கு ஆதரவாக 66.1 சதவீத வாக்குகள் பதிவாகின. அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய முன்னணியின் பெண் வேட்பாளர் மரின் லீ பென் 33.9 சதவீத வாக்குகள் பெற்றார்.
புதிய அதிபராக பதவியேற்ற மக்ரான், கடந்த திங்கட்கிழமை பெர்லின் நகரில் ஜெர்மன் வேந்தர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்புக்கான திட்டம் குறித்து பேசியுள்ளனர். பாரிசில் புதன்கிழமை நடந்த விருந்து நிகழ்ச்சியின்போது, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள விருந்து நிகழ்ச்சியில் இத்தாலி பிரதமர் பாவோலோ ஜென்டிலோனியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வளர்ச்சிக்கான நெருங்கிய ஒருங்கிணைப்பு குறித்து ஆலோசனை நடத்தலாம் என தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X