என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப்பின் நெருங்கிய உதவியாளர் நீக்கம்
Byமாலை மலர்30 April 2017 7:18 AM GMT (Updated: 30 April 2017 7:18 AM GMT)
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் வெளியுறவு உதவியாளராக இருந்த தாரிக்பதேமி அப்பதவியில் இருந்து திடீரென அதிரடியாக நீக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் வெளியுறவு உதவியாளராக இருந்தவர் தாரிக்பதேமி (72). இவர் நவாஸ் செரீப்புக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தார்.
இவர் திடீரென அதிரடியாக நீக்கப்பட்டார். சமீபத்தில் பாகிஸ்தானில் மந்திரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல்கள் இவர் மூலம் பத்திரிகைகளுக்கு கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையில் தாரிக்பதேமி குற்றவாளி என தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் நவாஸ் செரீப்புக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் வெளியுறவு உதவியாளராக இருந்தவர் தாரிக்பதேமி (72). இவர் நவாஸ் செரீப்புக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தார்.
இவர் திடீரென அதிரடியாக நீக்கப்பட்டார். சமீபத்தில் பாகிஸ்தானில் மந்திரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல்கள் இவர் மூலம் பத்திரிகைகளுக்கு கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையில் தாரிக்பதேமி குற்றவாளி என தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் நவாஸ் செரீப்புக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X