என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிர்கிஸ்தான்: கடும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பலி
Byமாலை மலர்29 April 2017 8:30 PM GMT (Updated: 29 April 2017 8:30 PM GMT)
கிர்கிஸ்தான் நாட்டில் நேற்றிரவு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிஷ்கெக்:
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தரப்பில், "கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
காணமல் போனவர்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இப்பகுதியில் நிலச்சரி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் உஸ்ஜென் மாவட்டத்தில் உள்ள ஓஷ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தரப்பில், "கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
காணமல் போனவர்களை தேடும் பணியை மீட்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இப்பகுதியில் நிலச்சரி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X