என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிலிப்பைன்ஸ்: நண்பர் மனைவியுடன் தொடர்பு; கணவன் ஆணுறுப்பை துண்டித்த மனைவி
Byமாலை மலர்28 April 2017 4:24 PM GMT (Updated: 28 April 2017 4:24 PM GMT)
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தவர் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்த கணவனின் ஆணுறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லியெசேல் பெடிட்டா (வயது 32). இவரது கணவர் மர்க் ஐலோலியோ நகரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார்.
அப்போது மார்க்கிற்கு அவரது நண்பர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லியெசேல் பெடிட்டாவிற்கு தெரிய வந்தது. இதனால் கணவன் மீது கொலைவெறி ஏற்பட்டது.
கடந்த 22-ந்தேதி மார்க் அதிக அளவில் மது அருந்துவிட்டு நண்பன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மார்க் தூங்கிக் கொண்டிந்த வீட்டை அடைந்த லியெசேல் பெடிட்டாவிற்கு கணவன் மீது பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் எந்தப் பெண்ணிடமும் போகக்கூடாது என்று எண்ணிய அவர், தான் தயாராக வைத்திருந்த ஒரு ஜோடி கத்தரிக்கோலால் ஒரு இஞ்ச் அளவிற்கு கணவனின் ஆணுறுப்பை துண்டித்தார்.
அயர்ந்த தூக்கத்தில் இருந்த மார்க் வலி தாங்காமல் அலறி துடித்தபடி எழுந்தார். இதற்கிடையே லியெசேல் பெடிட்டா சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் தான் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவிக்க விரும்பவில்லை. எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என்றும், பெண்ணாசை பிடித்த மார்க்கிற்கு இது ஒரு தண்டனை என்றும் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நண்பன் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றார் மார்க். ஆனால் வெட்டப்பட்ட பகுதியில் உள்ள செல்கள் அழிந்துவிட்டதால் ஒட்ட வைக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்போது மார்க்கிற்கு அவரது நண்பர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லியெசேல் பெடிட்டாவிற்கு தெரிய வந்தது. இதனால் கணவன் மீது கொலைவெறி ஏற்பட்டது.
கடந்த 22-ந்தேதி மார்க் அதிக அளவில் மது அருந்துவிட்டு நண்பன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மார்க் தூங்கிக் கொண்டிந்த வீட்டை அடைந்த லியெசேல் பெடிட்டாவிற்கு கணவன் மீது பயங்கர கோபம் ஏற்பட்டுள்ளது. இனி அவர் எந்தப் பெண்ணிடமும் போகக்கூடாது என்று எண்ணிய அவர், தான் தயாராக வைத்திருந்த ஒரு ஜோடி கத்தரிக்கோலால் ஒரு இஞ்ச் அளவிற்கு கணவனின் ஆணுறுப்பை துண்டித்தார்.
அயர்ந்த தூக்கத்தில் இருந்த மார்க் வலி தாங்காமல் அலறி துடித்தபடி எழுந்தார். இதற்கிடையே லியெசேல் பெடிட்டா சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் தான் செய்த தவறுக்காக வருத்தம் தெரிவிக்க விரும்பவில்லை. எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என்றும், பெண்ணாசை பிடித்த மார்க்கிற்கு இது ஒரு தண்டனை என்றும் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நண்பன் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றார் மார்க். ஆனால் வெட்டப்பட்ட பகுதியில் உள்ள செல்கள் அழிந்துவிட்டதால் ஒட்ட வைக்க முடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X