search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த காட்சி நேரடி ஒளிபரப்பு
    X

    மகளை கொன்று தந்தை தற்கொலை செய்த காட்சி நேரடி ஒளிபரப்பு

    தாய்லாந்தில் 11 மாத பெண் குழந்தையை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட காட்சியை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பாங்காக்:

    தாய்லாந்தில் உள்ள புக்கெட் தீவு என்ற இடத்தை சேர்ந்தவர் உட்டி‌ஷன் (வயது 21). திருமணமான இவருக்கு 11 மாதத்தில் பெண் குழந்தை இருந்தது. கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த உட்டி‌ஷன் தனது மகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    புக்கெட்டில் பாதி கட்டிய நிலையில் இருந்த கட்டிடத்துக்குள் குழந்தையை தூக்கி கொண்டு சென்றார். அங்கு குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


    இந்த காட்சிகள் முழுவதும் பேஸ்புக் சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும்படி செல்போனை செட் செய்து வைத்திருந்தார். அதில் அந்த காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. இதை ஏராளமானோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


    பி.பி.சி. செய்தி நிறுவனமும் இந்த காட்சியை பார்த்தது. அவர்கள் உடனடியாக பேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். எனவே, அந்த காட்சி உடனடியாக அகற்றப்பட்டது.

    சமீபத்தில் அமெரிக்கர் ஒருவர் 75 வயது நபரை கொலை செய்து அந்த காட்சியை சமூகவலை தளத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×