search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கென்யா: பஸ் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 27 பேர் உடல் கருகி பலி

    கென்யா நாட்டின் தலைநகரான மோம்பாஸா நெடுஞ்சாலையில் இன்று பேருந்தின் மீது சமையல் எண்ணை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    நைரோபி:

    கென்யா நாட்டின் துறைமுக நகரமான மோம்பாஸாவில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கி இன்று அதிகாலை சுமார் 50 பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நைரோபி-மோம்பாஸா தேசிய நெடுஞ்சாலையில் கிப்வேஸி என்ற பகுதி வழியாக சென்றபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல அந்த பேருந்தின் டிரைவர் முயன்றார்.

    அப்போது, சமையல் எண்ணை ஏற்றியபடி, எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி, பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
    Next Story
    ×