என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கென்யா: பஸ் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 27 பேர் உடல் கருகி பலி
Byமாலை மலர்25 April 2017 7:02 AM GMT (Updated: 25 April 2017 7:02 AM GMT)
கென்யா நாட்டின் தலைநகரான மோம்பாஸா நெடுஞ்சாலையில் இன்று பேருந்தின் மீது சமையல் எண்ணை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைரோபி:
கென்யா நாட்டின் துறைமுக நகரமான மோம்பாஸாவில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கி இன்று அதிகாலை சுமார் 50 பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நைரோபி-மோம்பாஸா தேசிய நெடுஞ்சாலையில் கிப்வேஸி என்ற பகுதி வழியாக சென்றபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல அந்த பேருந்தின் டிரைவர் முயன்றார்.
அப்போது, சமையல் எண்ணை ஏற்றியபடி, எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி, பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கென்யா நாட்டின் துறைமுக நகரமான மோம்பாஸாவில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கி இன்று அதிகாலை சுமார் 50 பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நைரோபி-மோம்பாஸா தேசிய நெடுஞ்சாலையில் கிப்வேஸி என்ற பகுதி வழியாக சென்றபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச் செல்ல அந்த பேருந்தின் டிரைவர் முயன்றார்.
அப்போது, சமையல் எண்ணை ஏற்றியபடி, எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு டேங்கர் லாரி, பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். சுமார் 20 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X