என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசிய பிரதமர் திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் சூரியனை கண்ட பனி போல மறையும்: டான்ஸ்ரீ நல்லா
Byமாலை மலர்25 April 2017 4:13 AM GMT (Updated: 25 April 2017 4:13 AM GMT)
“மலேசிய பிரதமர் அறிவித்த திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் இனி சூரியனை கண்ட பனி போல மறையும்”, என்று டான்ஸ்ரீ நல்லா அறிவித்தார்.
கோலாலம்பூர்:
மலையகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்த இந்திய சமூகத்தை கவுரவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி அதனை நிறைவேற்றி வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’ ஒன்றை பிரதமர் அறிவித்து உள்ளார்.
‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’ மனதுக்கு நிறைவை அளிப்பதாக மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தேசிய தலைவர் டான்ஸ்ரீ நல்லா கே.எஸ். தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
‘இளைஞர்களே நாளைய மலேசியாவின் தூண்கள்’, என்று நன்கு உணர்ந்த பிரதமர், உயர்கல்வி வளர்ச்சிக்காக கடந்த காலங்களை காட்டிலும் கூடுதலான இடஒதுக்கீடு செய்து உள்ளார். இதனால் சிறப்பான தேர்ச்சி நிலைகளை பெறும் இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் துறை சார்ந்த அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் வாய்ப்பு கிடைக்கும்.
மலேசிய இந்தியர்களின் ஆண்டாண்டு கால தலைவிதியாக புலம்பி வரும் குடியுரிமை பிரச்சினைக்கும் கட்டம் கட்டமாக தீர்வு கிடைக்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளது மற்றொரு தித்திப்பான செய்தி ஆகும்.
கடந்த 1957-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்து குடியுரிமை கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் மலேசியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பிரதமர் அறிவித்த இத்திட்டத்தை தேசிய முன்னணியுடன் இணைந்து நாடெங்கிலும் சேவையாற்ற மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தயாராக உள்ளது.
பிரதமர் அறிவித்த ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’, அவர் குறிப்பிட்டது போலவே வெறும் திட்டவரைவாக மட்டும் இல்லாமல் செயல்முறை காணும் வகையிலும் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. பிரதமர் அறிவித்த திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் இனி சூரியனை கண்ட பனி போல மறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மலையகத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்த இந்திய சமூகத்தை கவுரவிக்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி அதனை நிறைவேற்றி வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’ ஒன்றை பிரதமர் அறிவித்து உள்ளார்.
‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’ மனதுக்கு நிறைவை அளிப்பதாக மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தேசிய தலைவர் டான்ஸ்ரீ நல்லா கே.எஸ். தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
‘இளைஞர்களே நாளைய மலேசியாவின் தூண்கள்’, என்று நன்கு உணர்ந்த பிரதமர், உயர்கல்வி வளர்ச்சிக்காக கடந்த காலங்களை காட்டிலும் கூடுதலான இடஒதுக்கீடு செய்து உள்ளார். இதனால் சிறப்பான தேர்ச்சி நிலைகளை பெறும் இந்திய மாணவர்களுக்கு, அவர்களின் துறை சார்ந்த அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் வாய்ப்பு கிடைக்கும்.
மலேசிய இந்தியர்களின் ஆண்டாண்டு கால தலைவிதியாக புலம்பி வரும் குடியுரிமை பிரச்சினைக்கும் கட்டம் கட்டமாக தீர்வு கிடைக்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளது மற்றொரு தித்திப்பான செய்தி ஆகும்.
கடந்த 1957-ம் ஆண்டுக்கு முன்னதாக பிறந்து குடியுரிமை கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் மலேசியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் பிரதமர் அறிவித்த இத்திட்டத்தை தேசிய முன்னணியுடன் இணைந்து நாடெங்கிலும் சேவையாற்ற மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தயாராக உள்ளது.
பிரதமர் அறிவித்த ‘இந்திய சமூகத்திற்கான பெருந்திட்டம்’, அவர் குறிப்பிட்டது போலவே வெறும் திட்டவரைவாக மட்டும் இல்லாமல் செயல்முறை காணும் வகையிலும் இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. பிரதமர் அறிவித்த திட்டங்களால் இந்தியர்களின் கஷ்டங்கள் இனி சூரியனை கண்ட பனி போல மறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X