என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் வன்முறை சம்பவங்களில் 35 பேர் பலி
Byமாலை மலர்24 April 2017 8:35 PM GMT (Updated: 24 April 2017 8:35 PM GMT)
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 உயர்ந்தது
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் ரீதியான போட்டியில் இந்த குழுக்களுக்கிடையே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் வெடிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம், சினலோவ் மாகாணத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போல், மிசோகன் மாகாணத்தில் 2 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 9 பேர் பலியாகினர்.
இதற்கிடையே, குர்ரெர்ரோ மாகாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதே போல் வெராகுருஸ் மாகாணத்தில் இருந்து 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
எனவே, போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆகியது.
மெக்சிகோவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தொழில் ரீதியான போட்டியில் இந்த குழுக்களுக்கிடையே அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் வெடிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம், சினலோவ் மாகாணத்தில் உள்ள வெவ்வேறு இடங்களில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவங்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதே போல், மிசோகன் மாகாணத்தில் 2 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 9 பேர் பலியாகினர்.
இதற்கிடையே, குர்ரெர்ரோ மாகாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் 8 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதே போல் வெராகுருஸ் மாகாணத்தில் இருந்து 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
எனவே, போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆகியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X