என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடகொரியாவை விட்டு வெளியேற முயன்ற அமெரிக்கர் கைது
Byமாலை மலர்23 April 2017 7:48 PM GMT (Updated: 23 April 2017 7:48 PM GMT)
வடகொரியா நாட்டை விட்டு வெளியேற முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியோல்:
உலக அளவில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால் விடும் ஒரே நாடாக வடகொரியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வடகொரியாவில் உள்ள பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டோனி கிம் என்ற அந்த அமெரிக்கர் வடகொரியாவை விட்டு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்று ஏற்கனவே இரண்டு அமெரிக்கர்கள் வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மூன்றாவது சம்பவம் ஆகும்.
முதல் நபர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபர் ஒரு ஹோட்டல் ஒன்றில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்டு இருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர், யான்பியான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்றும், சில நிவாரண திட்டங்கள் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அவர் வடகொரியாவில் இருந்ததாக தென் கொரிய செய்தி புலனாய்வு தெரிவித்துள்ளது.
உலக அளவில் அமெரிக்காவிற்கு நேரடியாக சவால் விடும் ஒரே நாடாக வடகொரியா திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், வடகொரியாவில் உள்ள பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க குடிமகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டோனி கிம் என்ற அந்த அமெரிக்கர் வடகொரியாவை விட்டு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்று ஏற்கனவே இரண்டு அமெரிக்கர்கள் வடகொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது மூன்றாவது சம்பவம் ஆகும்.
முதல் நபர் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நபர் ஒரு ஹோட்டல் ஒன்றில் திருட முயன்றதாக கைது செய்யப்பட்டு இருந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூன்றாவது நபர், யான்பியான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்றும், சில நிவாரண திட்டங்கள் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அவர் வடகொரியாவில் இருந்ததாக தென் கொரிய செய்தி புலனாய்வு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X