search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்சில் இன்று அதிபர் தேர்தல் முதற்கட்ட வாக்குபதிவு தொடங்கியது
    X

    பிரான்சில் இன்று அதிபர் தேர்தல் முதற்கட்ட வாக்குபதிவு தொடங்கியது

    பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் தொடங்கியது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் அதிபர் பிரான் கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலது சாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான், மற்கீம் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

    இந்த தேர்தலில் தற் போதைய அதிபர் பிரான் கோயிஸ் ஹோலண்டே 2-வது தடவையாக போட்டியிடவில்லை. ஏனெனில் அவர் மக்கள் செல்வாக்கை பெறவில்லை.

    இந்த நிலையில் இன்று ஓட்டுபதிவுக்காக பிரான்சில் முக்கிய இடங்களில் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பிரெஞ்ச் காலனி நாடுகளிலும், வெளி நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரகங்களிலும் வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதை தொடர்ந்து அங்கு ஏராளமான மக்கள் நீண்ட ‘கியூ’ வரிசையில் நின்று தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.


    ஓட்டுபதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பு பாரீசில் போலீஸ் அதிகாரி ஒருவர் ஐ.எஸ். தீவரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 3 போலீசார் காயம் அடைந்தனர். எனவே தேர்தலை சீர் குலைக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவியது.

    ஆகவே அங்கு பாதுகாப்பு பணியில் 50 ஆயிரம் போலீசாரும், ராணுவ வீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வாகனங்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று நடைபெறுவது முதற்கட்ட வாக்குபதிவாகும். ஓட்டுபதிவு முடிந்ததும் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். அதில் பதிவானதில் 50 சதவீதம் வாக்குகளை பெறுபவர் அதிபர் ஆவார்.

    அதே நேரத்தில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் வருகிற மே 7-ந் தேதி 2-வது கட்டமாக வாக்குபதிவு நடைபெறும். அதில் ஏற்கனவே நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற 2 பேர் மட்டும் போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள்.

    Next Story
    ×