என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றம்: இந்திய மருத்துவரை தொடர்ந்து மேலும் இருவர் கைது
Byமாலை மலர்21 April 2017 6:21 PM GMT (Updated: 21 April 2017 6:21 PM GMT)
அமெரிக்காவில் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றத்தில், இந்திய மருத்துவருக்கு உதவி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க்:
பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றத்திற்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உதவி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஜுமானா நகர்வாலா (44). அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள பிறப்புறுப்பை சிதைப்பு குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் 12-ல் கைது செய்யப்பட்டார். அதுவும் 6 முதல் 8 வயதான 2 பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை சிதைத்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்வாலாவுக்கு உதவி செய்ததாக லிவோனியா நகர மருத்துவர் பக்ருதீன் அட்டார் மற்றும் அவரது மனைவி பரிதா அட்டார் லிவோனியா நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லிவோனியாவில் மருத்துவமனை நடத்தி வரும் அட்டார், மருத்தவமனை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பது குற்றம் என 1996-ல் அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நகர்வாலா மற்றும் அவருக்கு உதவி செய்தவர்களுக்கு அமெரிக்க விதிகளின் படி அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பு சிதைப்பு குற்றத்திற்காக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உதவி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஜுமானா நகர்வாலா (44). அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள பிறப்புறுப்பை சிதைப்பு குற்றத்திற்காக கடந்த ஏப்ரல் 12-ல் கைது செய்யப்பட்டார். அதுவும் 6 முதல் 8 வயதான 2 பெண் குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை சிதைத்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்வாலாவுக்கு உதவி செய்ததாக லிவோனியா நகர மருத்துவர் பக்ருதீன் அட்டார் மற்றும் அவரது மனைவி பரிதா அட்டார் லிவோனியா நகர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லிவோனியாவில் மருத்துவமனை நடத்தி வரும் அட்டார், மருத்தவமனை நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களின் பிறப்புறுப்பை சிதைப்பது குற்றம் என 1996-ல் அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நகர்வாலா மற்றும் அவருக்கு உதவி செய்தவர்களுக்கு அமெரிக்க விதிகளின் படி அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X