என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்க பகுதிக்குள் அத்து மீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்
Byமாலை மலர்20 April 2017 7:42 AM GMT (Updated: 20 April 2017 7:42 AM GMT)
அமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி பறந்த ரஷ்ய போர் விமானங்களை, அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்:
வட அமெரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக்கிறது. இதுவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது.
இதையொட்டிதான் ரஷ்யாவின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.
இவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தது. இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும்.
ரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்ததும் அமெரிக்கா 2 போர் விமானங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தது. இதனால் ரஷ்ய விமானங்கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட்டன.
இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
வட அமெரிக்க கண்டத்தில் கனடாவின் மேற்கு பகுதியில் அலாஸ்கா என்ற இடம் உள்ளது. இது, அமெரிக்காவுக்கு சொந்தமான பகுதி ஆகும். இதையொட்டி கோடியாக் என்ற தீவு இருக்கிறது. இதுவும் அமெரிக்காவுக்கு சொந்தமானது.
இதையொட்டிதான் ரஷ்யாவின் கிழக்கு பகுதி நிலப்பரப்பு அமைந்துள்ளது. ரஷ்ய போர் விமானங்கள் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றி வருவது வழக்கம்.
இவ்வாறு ரோந்து வந்த 2 போர் விமானங்கள் கோடியாக் தீவு பகுதியில் அத்து மீறி நுழைந்து சுற்றி வந்தது. இவை டி.யு.-95 என்ற வகையை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்கள் ஆகும்.
ரஷ்ய விமானங்கள் அத்து மீறி நுழைந்தது தெரிய வந்ததும் அமெரிக்கா 2 போர் விமானங்களை அந்த திசை நோக்கி அனுப்பியது. எப்.-22 ராப்டார் வகையை சேர்ந்த இந்த விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்தது. இதனால் ரஷ்ய விமானங்கள் பின்வாங்கியதுடன் தங்கள் வான்பகுதிக்கு சென்று விட்டன.
இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து பென்டகனோ, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமோ எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X